மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K Stalin அவர்களின் நல்லாட்சியில் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து நிலையான வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளை வழங்கி வருகின்றோம். பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கடையால் பேரூராட்சி செறுகடத்துக்காணி மற்றும் சுருளகோடு ஊராட்சி கூவக்காட்டு மலை பகுதிகளில் 84 பயனாளிகளுக்கு 216 ஏக்கர் நிலமும் மூக்கரைக்கல், பெருஞ்குருவி, புரையிடம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களில் 61 பயனாளிகளுக்கு 50 ஏக்கர் நிலமும் நில உரிமை பட்டா வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கழக அரசு என்றும் மலை வாழ் மக்களுக்கு துணை நிற்கும் என்ற உறுதியையும் அளித்தேன்.